மத்திய ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் மத்திய ரஷ்யாவில் இன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். 23 பேருடன் சென்ற எல் -410 விமானம் டாடர்ஸ்தான் குடியரசின் மீது பறக்கும் போது உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆறு பேர் மீட்கப்பட்டனர். விபத்து சிக்கிய விமானத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், விமானம் இரண்டாக உடைந்திருப்பது போல தெரிகிறது. முன் பகுதி முழுமையாக நொறுங்கி உள்ளது. உயிர் பிழைத்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
சமீப காலமாக ரஷ்ய விமான விபத்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகள் பழைய விமானங்களால் நடக்கின்றன. முன்னதாக, பழைய அன்டோனோவ் ஆன் -26 விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் கிழக்கில் விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் இறந்தனர். ஜூலை மாதம், கம்சட்காவில் நடந்த விமான விபத்தில் 28 பேரும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…