சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை நாம் செய்திகளில் படித்து வருகிறோம். மேலும்,எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,சம்மந்தப்பட நிறுவனங்களுக்கு “கடுமையான அபராதம்” விதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.மேலும், புனேவில் மார்ச் 26 அன்று நடந்த ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தீ விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,முன்கூட்டிய நடவடிக்கையாக,குறிப்பிட்ட தொகுப்பில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் குறித்து விரிவான சோதனையை நாங்கள் நடத்துவோம்.எனவே 1,441 யூனிட் S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்.இந்த ஸ்கூட்டர்கள் எங்கள் சேவை பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும் மற்றும் அனைத்து பேட்டரி அமைப்புகள், வெப்ப அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் முழுவதும் முழுமையான கண்டறியும் மூலம் செல்லும்”,” என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தங்களது 3,000 யூனிட்டுகளுக்கு மேலான எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப் பெற்றது.குறிப்பாக,கடந்த சனிக்கிழமையன்று ஆந்திரப் பிரதேசத்தில்,பூம் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த கார்பெட் 14 எலக்ட்ரிக் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…