இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது …!

Published by
Rebekal

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் 14 பேரும் இன்று அதிகாலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த பொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மன்னார் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

1 hour ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

2 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

3 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

4 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

5 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

5 hours ago