கடும் பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக மோதிக்கொண்ட 130 வாகனங்கள் – 6 உயிரிழப்பு!

Published by
Rebekal

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவக் கூடிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக தொடர்ச்சியாக 130 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளது, 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆர்டிக் கடலில் வீசக்கூடிய கடும் காற்று காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு முன்னால் வரக்கூடிய வாகனங்கள் எது என்பது கூட சரியாக கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இன்டெர் ஸ்டேட் 35 W சாலையில் இன்று பனிப்பொழிவு காரணமாக பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.எனும்  இதில் அதிவேகமாக அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டதில் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கு முதல் காரணம் 18 சக்கர டிரைலர்கள், கார்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையில் உருண்டது தான் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையை மறைக்கும் அளவிற்கு அந்த இடத்தில் பனிமூட்டம் இருப்பதாகவும் இந்த இடங்களில் பணியின் காரணமாக அதிவேகமாக சென்ற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

4 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

7 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

7 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

10 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

10 hours ago