அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட 12 முதல் 15 வயதினருக்கு அனுமதி!

Published by
Rebekal

அவசர கால தேவைக்கு அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர்  தடுப்பூசி போடலாம் என உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது 3 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் தீவிரம் அமெரிக்காவில் அதிகமாக காணப்படும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும் அங்கு மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குரானா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு போடப்பட்டு வரும் நிலையில், தங்கள் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடுவதற்கு அனுமதி அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்து இருந்துள்ளது. இதனையடுத்து 12 முதல் 15 வயதில் வயதினருக்கும் தடுப்பூசி அவசரகாலத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago