கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர், இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது.
ஸ்பெயினின் சாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919இல் பிறந்துள்ளார்.
ஆனால் இவர் தற்போது வரை பிப்ரவரி 8 ஆம் தேதி தான் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 4.92 அடி உயரம் கொண்ட சாதுர்னினோவுக்கு ஏழு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே தனது மனைவி இறந்து விட்டார் என முதியவர் கூறியுள்ளார்.
தற்போது அவரது ஒரு மகள் மற்றும் மகன் தான் அவரை வைத்து பராமரித்து வருவதாகவும் அவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 18 மாதங்கள் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டதாகவும், தற்பொழுது 112 வயது நிறைவடைந்து உள்ளதை அனைவரும் கொண்டாடியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…