கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள்! காரணம் என்ன?

Default Image

கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள்.

பொதுவாக கோடைகாலத்தில் கிரீன்லாந்து நாட்டில், 50 சதவீத பனிப்பாறைகள் உருகுவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் மீண்டும் இந்த பாறைகள் உருவாகிவிடும். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், பனி உருகுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிரீன்லாந்தில், 24 மணி நேரத்தில், 1,100 கோடி டன் பனிப்பாறைகள் உருகி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, ‘கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் ‘பெரிய பனி உருகும் நிகழ்வுக்கு ஆளாகியுள்ளது.

பில்லியன் டன்களில் உருகும் நீர், அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து, கடலின் நீர்மட்டம் உயர்கிறது. புளோரிடா மாநிலம் முழுவதையும், கிட்டத்தட்ட ஐந்து அங்குல நீரில் மூடுவதற்கு இந்த நீர் போதுமானது. ஆதிக்க வெப்பத்தால், அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகியுள்ளது என்றும், உலகம் வெப்பமயமாதல் போன்ற பாதிக்கும் காரணங்களால், எதிர்காலத்தில், இன்னும் மோசமான நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது.’ என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்