2 நாட்களில் 100,000 பேர் வெளியேற்றம்-ஜெலன்ஸ்கி..!

Default Image

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில்  ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை  அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது.

உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா சமீபத்தில் தெரிவித்தது. இந்த சண்டையில் இதுவரை 300-க்கும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்ட்டுள்ளது. ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிற நாடுகளும் யோசித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள கீவ் புறநகர்ப் பகுதிகள் உட்பட ஏழு நகரங்களில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் 100,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு  அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்