விநாயகர் சதுர்த்தி:தூத்துக்குடி மாவட்டங்களில் 1000 சிலைகள் வைப்பு !!!
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 1000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகிற 27ம் தேதி முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுதது செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.