அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க அரசு மக்களை தடுப்பூசி செலுத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி நியூயார்க் நகரத்தின் மேயர் டெ பிளாசியோ, நாளை(ஜூலை 30) முதல் செப்டம்பர் மாத இரு வாரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்கு 100 டாலர்கள் பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செப்டம்பருக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…