கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். 32 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்படும். – பன்னாட்டு மீட்பு குழு (IRC -International rescue committee)
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பேரிடராக இருக்கிறது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு. இந்த தொற்றானது வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.
இந்த கொரோன வைரஸால், இதுவரை உலக முழுக்க 31,38,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,18,010 பேர் இந்த கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 9,56,064 பேர் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பன்னாட்டு மீட்பு குழு அமைப்பானது (IRC -International rescue committee) அண்மையில் தனது இணையதள பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 100 கோடி பேர் வரையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், 32 லட்சம் பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால், ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும். எனவும் குறிப்பிட்டு விரிவான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியானது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…