10 பேர் பலி: 20 ஆம்புலன்ஸ், 800 அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என சிக்கி தவிக்கும் மக்களை மீட்க போராட்டம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கிழக்கு சீனாவில் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவராகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அவரசநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

10 பேர் பலி: 20 ஆம்புலன்ஸ், 800 அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என சிக்கி தவிக்கும் மக்களை மீட்க போராட்டம்.!

இந்த ஹோட்டலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாடில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர். இடிப்பாடில் இருந்து 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 37 பேர் உயிருடன் சிக்கி கொண்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 20 அம்புலன்ஸ்கள், 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சரிவுக்கு காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,695 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,097ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago