ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கப்படும் – ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் தடுப்பூசியை மட்டுமே உலக மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்கி உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஏழை நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளின் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து 27 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் உலகளாவிய கொரோனா தடுப்பூசியின் சமமான அணுகுமுறையை உறுதி செய்யும் முயற்சிகளை நிறுத்திவிட வேண்டும் என்றும் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இதுவரை இந்தியாவில் 20 கோடியே 4,94,991 டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025