நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதியை குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்த படத்தில் மறைந்த நிர்வாகி ஒருவரின் பெயரை வைத்து இருப்பதாக கூறி அண்மையில் சர்ச்சை எழுந்தது. எனவே பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து மயிலாடுதுறையில் உள்ள காவல் நிலையத்தில் ஜெய்பீம் பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்துள்ளார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சமர்ப்பணமாக கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், அந்த வகையில் நாங்கள் அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம். எனவே இனி சூர்யா எங்கும் நடமாடவே கூடாது என கூறியுள்ளார்.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…