சுஷாந்த் தற்கொலை வழக்கு ரியா சக்கரபர்த்தி கூறுகையில், இந்த வழக்கை மும்பைக்கு மாற்றும்படியும், தனக்கு நீதி மீது நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தை குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சுஷாந்த் சிங்கின் தந்தை, மகனை மரணத்திற்கு தூண்டியது சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபர்த்தி என்றும், அவர் தான் சுஷாந்தின் மன உளைச்சலுக்கு காரணம் என்றும், சுஷாந்த் வங்கி கணக்கிலிருந்து 15கோடி வரை எடுத்துள்ளதாகவும் கூறி பீகாரில் உள்ள பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து கூறிய ரியா, தனக்கு கடவுள் மற்றும் நீதி மீது நம்பிக்கை உள்ளதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என்றும், கடந்த ஜூன் 8 வரை தான் சுஷாந்துடன் லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். அதனுடன் பீகார் மாநிலத்தில் தனக்கு எதிராக தொடரும் வழக்கை மும்பைக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரியாவை நம்ப தயாராகாமல் அவர் நாடகமாடுவதாகவும், சுஷாந்தின் மரணத்திற்கு இவர் தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ரியா அவரது இந்த வழக்கை வாதாட வழக்கறிஞருக்கு தினமும் 1கோடி வரை சம்பளம் கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரியா மீது ரசிகர்களிடையில் உள்ள சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…