வெள்ள நிவாரண நிதி ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது – கேரளா நிதி அமைச்சர்
மழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்லன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகினறனர் கேரளா மக்கள். கேரளாவின் ஏனைய பகுதிகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், பயிர்கள் என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகி உள்ளன.
மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பெருகி பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது அம்மாநில அரசு. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
71 கோடி ரூபாய் மதிப்பில் நிதிஉதவி அளித்தார் நீத்தா அம்பானி.
கேரளா வெள்ள நிவாரண நிதி ரூபாய் 1000 கோடி :
இதுவரை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியின் கீழ் சுமார் 1000 கோடி ரூபாய் நிதி வந்து சேர்ந்துள்ளது என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.