விராட் கோலி கவுண்ட்டி போட்டியில் விளையாட மாட்டார் – பிசிசிஐ அறிவிப்பு..!!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கவுண்ட்டி போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மருத்துவக்குழு சோதனையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்