வியன்னாவில் டிரம்ப் – புதின் சந்தித்து பேச திட்டம்..!

Default Image
சிரியா விவகாரத்தால் அமெரிக்கா – ரஷியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பூசல், பிரிட்டன் நாட்டில் ரஷிய முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகளை ரசாயன தாக்குதலால் ரஷியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினால் பூதாகரமாக வெடித்தது.
இதுதவிர, அமெரிக்கா – ரஷியா இடையிலான மேலும் சில வேறுபாடுகளை களைவதற்காக இருநாட்டு தலைவர்களும் நேருக்குநேர் சந்தித்துப் பேச வேண்டும் என சர்வதேச அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஆஸ்திரியா நாட்டு பிரதமர் செபாஸ்டின் குரூஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஷிய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் முன்னர் புதின் தொலைபேசியில் பேசியபோது இதுதொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாகவும், சந்திப்பு நடைபெறும் தேதியை மட்டும் இரு அதிபர்களும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என சீனாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிமிர்ட்டி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான தேதியை குறிப்பிட்டால் எனது அலுவல்களை பொறுத்து டிரம்ப்பை சந்தித்துப் பேச நான் தயாராகவே இருக்கிறேன் என சீனாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதினும் குறிப்பிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்