வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் தீவிபத்து.!திட்டமிட்ட சதி.! பிரதமர் கண்டனம்..!

Default Image
ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று திடீரென தீபிடித்து விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தை அறிந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட சதி. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அரசு முடிவு செய்திருந்த நிலையில் தீ விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்