வலு தூக்குதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக அணி…!!!

Default Image

சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வேர்களை பதக்கங்களை வென்று சாதித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். தமிழகத்திலிருந்து இதில் 22 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான 93 கிலோ பிரிவில் 690 கிலோ தூக்கி சென்னை வீரர் எம்.நந்தகுமார் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

அதேபோல் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் 237.5 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.இதன் மூலம் தமிழகம் தேசிய வலுதூக்குதல் போட்டியில் 2 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்