ரஷ்யா:உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை…!
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சுவரொட்டி ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் சிரியாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் உலகக்கோப்பை கால்பந்து மைதானத்தில் புதின் பேசிக் கொண்டிருப்பது போலவும், அவர் துப்பாக்கியால் குறி வைக்கப்பட்டிருப்பது போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை 11வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்