யூலின் நாய்கறி திருவிழாவில் 10 ஆயிரம் நாய்களை பலியிடும் சீனர்கள்..!

Default Image
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த திருவிழாவில் பலியிடப்படும் விலங்குகள் தான்.
இந்த ஆண்டு யூலின் நாய்கறி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு வாரம் இந்த நாய்கறி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவில் கோடைகாலங்களில் நாய் இறைச்சியை உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பப்படுகிறது. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.
ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே நாய்கள் திருடப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் மிக கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. நாய்கள் மட்டுமின்றி பூனைக்கறியும் இந்த திருவிழாவில் கிடைக்கும்.
இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றிய கவலைகள் இன்றி நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் தயாராகி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்