"யாருக்கு வாக்கு அளித்தோம்" இனி ஒப்புகை சீட்டு இயந்திரம் தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Default Image

மிசோரம், மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான் , தெலுங்கானா , சத்திஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்கும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் கூறினார்.

சமீப காலமாக தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகின்றது.தேர்தல் நடைமுறையை மற்ற வேண்டும் , தேர்தல் சீர்திருத்தம் என ஏராளமான விமர்சனம் , கோரிக்கைகள் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வந்தன.இந்நிலையில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல்  ஆணையர்கள்  சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத்  ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தார்.தேர்தல் நடத்தல் விதிமுறை  இன்று முதல் அமுலுக்கு வருகிறது என்றும் இந்த முறை  ஐந்து மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்கும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்