முஸ்லிமை நிறுத்தியதால் தோற்றோம்..!! பிஜேபி MLA சர்சை பேச்சு

Default Image

முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் தேர்தலில் தோற்றோம்: பாஜக எம்எல்ஏ

மத்தியப் பிரதேசம் ,
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்தோம் என்று மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மாஹித்பூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ளவர் பாஜகவை சேர்ந்த பகதூர் சிங் சௌஹான்.அண்மையில், மத்தியப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
Image result for பாஜக
இதுதொடர்பாக தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த சிவராஜ் சிங் சௌஹான், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 6 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், அவர்கள் அனைவருமே தோல்வியடைந்துவிட்டனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது என்றார். இதனிடையே, பகதூர் சிங் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்