முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம்….!!

Default Image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் துணை முதலமைச்சர் உட்பட லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜா சாலையில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்