முக்கனியின் முதன்மை கனியான மா -வின் மகத்துவமான மருத்துவ குணங்கள்…!!!
மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதுண்டு. மா-வின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது அவற்றின் மருத்துவகுணங்கள் பற்றி பாப்போம்.
மருத்துவ குணங்கள் :
சுவாசப் பிரச்சனைகள் :
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. மேலும் அதன் இலையை தென் விட்டு வதக்கி நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு :
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி போடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் மாம்பட்டையை நீரில் அவித்து அதனை அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எது அணுகாது. மா வேர்ப்பட்டை வயிற்றுப்புண் நீங்கும்.
மாம்பிசினை கால் பித்தவெடிப்பு உலா பகுதிகளில் தடவி வந்தால் கால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல் படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் குணமாகும். மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தி :
ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்புனை ஆற்றும். மூல நோயின் பாதிப்பை குறைக்கும். தீக்காயம பட்டவர்கள் மா இலையை சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குலைத்துப்பூசி வந்தால் தீப்பூண் விரைவாக ஆறும்.