முகத்தை பளபளக்க செய்யும் பண்ணும் சந்தனம்….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே முகத்தில் உருவாகும் பருக்கள் தான். இந்த பிரச்சனை தீருவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதற்கு முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. மேலும் இதற்க்கு பல மருத்துவங்களை மேற்கொண்டாலும் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதிலிருந்து தீர்வு காண சில வழிமுறைகளை பார்ப்போம்.
பயன்கள் :
கண்கள் குளிர்ச்சி பெற :
சந்தானம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் கண்களை சுற்றி தடவிக் கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
முகம் பளபளப்பாக :
சந்தானம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
சரும குளிர்ச்சி தன்மை :
சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப்பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிப்புற தொழில் பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சி தன்மை கிடைக்கும்.
முகம் மினுமினுப்பாக :
பசும் பால் விட்டு சந்தன கட்டையை அரைத்து, அதை உடம்பில் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து குளிக்க, தளர்ந்த சதையெல்லாம் இறுகி, உடல் மினுமினுப்பாக இருக்கும்.