மாஸ்க் போட்டு கலாய்க்கும் இலங்கை அணி வீரர்கள் : பதிலடி கொடுக்கும் நெட்டிசங்கள்

Default Image

இந்தியா இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி வருகிறது. இதில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 265 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஷிகர் தவானும் (35), புஜாராவும் (45) களத்தில் நிற்கின்றனர்.

இந்நிலையில் பந்துவீசும் இலங்கை அணியானது முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பந்துவீசுகின்றனர். மேலும் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு நிலவுவதாகவும் இதனால் போட்டியை நிறுத்தகோரியும் இலங்கை அணி வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

டெல்லியில் தற்போது மாசு அடைந்து அதன் புள்ளிகள் 88.93 ஆக உள்ளது. டெல்லியின் பரப்பளவு 1484.ச.கி.மீ ஆகும். அதே நேரத்தில் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் மாசு அடைந்து அதன் புள்ளிகள் 64ஆகும். அதன் பரப்பளவு 37.31.ச.கி.மீ. ஆகும்.டெல்லியை ஒப்பிடும் போது கொழும்புவில் மாசு அதிகமாவே உள்ளது. இந்த புள்ளிவிவரங்களை வைத்துகொண்டு நெட்டிசங்கள் இலங்கை அணி வீரர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்