பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து வரும் ஓம் ஒலியானது நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை போக்க வல்லது. அந்த சங்கு சிறிய அளவில் இருந்தால் வீட்டு பீரோவில் பண பெட்டியில் வைத்து விடலாம் பெரியதாக இருந்தால் பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வலம்புரி சங்கினை பூஜை செய்யும்போது ஒரு பித்தளை தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட சங்கினை வைத்துவிட வேண்டும். கூர்மை பகுதியானது கிழக்கு நோக்கியும், மற்றொரு பகுதி மேற்கு நோக்கியும் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்ய தொடங்கும் நாளானது வளர்பிறை வெள்ளி கிழமையாக இருந்தால் மிக நல்லது. வாரம் ஒரு முறையாவது சங்கினை நன்றாக சுத்தம் செய்து அதனுள் தண்ணீர் மாற்றி பூஜை செய்யவேண்டும். பச்சரிசியை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.
மகாலட்சுமியின் சகோதரனான சங்கினை கவனிக்காமல் ஒரு மூலையில் வைத்து விடக்கூடாது. அது நமது வீட்டுக்கு நல்லது அல்ல.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…