பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து வரும் ஓம் ஒலியானது நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை போக்க வல்லது. அந்த சங்கு சிறிய அளவில் இருந்தால் வீட்டு பீரோவில் பண பெட்டியில் வைத்து விடலாம் பெரியதாக இருந்தால் பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வலம்புரி சங்கினை பூஜை செய்யும்போது ஒரு பித்தளை தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட சங்கினை வைத்துவிட வேண்டும். கூர்மை பகுதியானது கிழக்கு நோக்கியும், மற்றொரு பகுதி மேற்கு நோக்கியும் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்ய தொடங்கும் நாளானது வளர்பிறை வெள்ளி கிழமையாக இருந்தால் மிக நல்லது. வாரம் ஒரு முறையாவது சங்கினை நன்றாக சுத்தம் செய்து அதனுள் தண்ணீர் மாற்றி பூஜை செய்யவேண்டும். பச்சரிசியை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.
மகாலட்சுமியின் சகோதரனான சங்கினை கவனிக்காமல் ஒரு மூலையில் வைத்து விடக்கூடாது. அது நமது வீட்டுக்கு நல்லது அல்ல.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…