மல்யுத்த வீரர் சுஷில் குமார் காமன்வெல்த்தில் பங்கேற்பதில் சிக்கல்!

Default Image
சுஷில் குமார் காமன்வெல்த்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காமன் வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அண்மையில் டெல்லியில் நடைபெற்றன. இதில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சுஷில்குமார் மற்றும் ராணா ஆகியோர் மோதும் போது இருவரின் ஆதராளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
Image result for sushil kumar & rana team fight
இதில் ராணாவின் சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரித்து வரும் நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்திலும் ராணா புகார் அளித்திருந்தார்.
Related image
இந்த புகார் மல்யுத்த சம்மேளனத்தின் ஒழுக்க நெறிகளுக்கான குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி போலீஸார் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு செய்தால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்