போலீஸ் வாகனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்…..5 பேர் பரிதாப பலி…!!

Default Image

பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருக்கும் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட எல்லையில் டேரா இஸ்மாயில் கான் எனும் மாவட்டத்தின் உள்ள பேஹ்ரோ பகுதியில் ரோந்து பணியின் ஈடுபட்டுக் கொண்டிருந்த  போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிக்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 4 போலீசார் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட போலீசார் ஒருவர் தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்