பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தாந் நாட்டில் உள்ள பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்கிற பெண் மீது வழக்குப் போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தது இந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்த்தியதாக தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியை சேர்ந்த 86 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள அந்நாடு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 86 பேர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது மட்டுமல்லாமல் 12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…