பேஸ்புக் தோழியை சந்திக்க சட்ட விரோதமாக சென்று 6 ஆண்டுசிறை தண்டனை பெற்ற பெற்ற இந்தியர் இன்று நாடு திரும்புகிறார்….

Default Image

தோழியை சந்திக்க சட்ட விரோதமாக பாகிஸ்தான் சென்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தியர் இன்று நாடு திரும்புகிறார்.
மும்பையை சேர்ந்த அமித் நிஹால், பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் தோழியை சந்திக்க கடந்த 2012ல் ஆப்கானிஸ்தான் வழியாக அந்நாட்டிற்கு சென்றார். சட்ட விரோதமாக நுழைந்த குற்றத்திற்காக அமித் நிஹாலுக்கு பாகிஸ்தான் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனை முடிந்த நிலையில், அவரை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. பாகிஸ்தானின் முடிவை இந்தியா வரவேற்பதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். மகனை இழந்து தவித்த பெற்றோருக்கு, தற்போது நிம்மதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். விடுதலையை தொடர்ந்து, அமித் நிஹால் இன்று இந்தியா திரும்புகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்