பெரு நாட்டில் பலி கொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிப்பு..!

Default Image
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர். அதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்