பிரான்சில் இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசார்!மக்கள் போராட்டம் வெடித்தது!

Default Image

பிரான்சில் போலீசார் இளைஞரை சுட்டுகொன்றதால் அதை எதிர்த்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது.

பிரான்சில் உள்ள நான்டெஸ் நகரில் நேற்றுமுன்தினம் அபுபக்கர் என்ற இளைஞர் காரில் வந்துள்ளார்.இந்த  இளைஞர் 20 வயதிற்கு மேற்பட்டவர் ஆவார்.பின்னர் இவரது காரை போலீசார் மறைத்துள்ளனர்.உடனே அபுபக்கர் போலீசார் மறைப்பதை உணர்த்து அவர் காரை பின்னாடி திருப்பியதாக கூறப்படுகிறது.இதனால் பின்னால் நின்றுக்கொண்டிருந்த போலீசார் மீது ஏறியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைத்த மற்றொரு போலீசார் அபுபக்கரை துப்பாகியால் சுட்டார்.சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.

இதைக்கண்டித்து அந்த பகுதியின் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால் சிலர் அங்கு உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களை அடித்து நொறுக்கினர்.ஏராளமான இடங்களில் தீயும் வைக்கப்பட்டது.இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்