பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மனைவி மரணம்…!

Default Image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் நாவஸ் செரிப் ஆவார்.இவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது.

கடந்த ஜூலை 6 ஆம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இவர் மீது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஊழல் பணத்தில் நவாஸ் செரீப் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், நவாஸ் செரீப் மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம்.

இந்நிலையில் அவரை அவரது மகளையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருன்கின்றனர்.மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் லண்டனில் உள்ளார்.இந்நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு வரும் பொழுது கைது செய்ய திட்டமிட்டனர்.இதன் பின்னர்  நவாஸ் ஷெரீபும், அவரது மகள் மரியமும், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். 

Image result for நவாஸ் மனைவி

இந்நிலையில் நவாஸ் செரீபின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.இவர் பெயர் குல்சும்.இவருக்கு  68 வயது ஆகும். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தார்.இன்று  அங்குள்ள மருத்துவமனையில் காலமானார. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்