உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக தரை,வான் வழியாக ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனை கொடூரமாக தாக்கி வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
எனினும்,18 முதல் 60 வயது வரையுள்ள உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.மேலும்,ரஷ்யாவை எதிர்த்து போரிட பொதுமக்களுக்கு ஆயுதமும் உக்ரைன் அரசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:
“எனக்கு இராணுவ அனுபவம் இல்லை,ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் அனுபவம் உள்ளது.நிச்சயமாக,நான் சண்டையிடுவேன்,நான் திரும்பி வர முயற்சிக்கும் ஒரே காரணம் இதுதான்”,என்று தெரிவித்துள்ளார்.
36 வயதான ஸ்டாகோவ்ஸ்கி, ஒருமுறை உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருந்தார் மற்றும் 2013 இல் விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…