நாளை உலகக்கோப்பை, இன்று பயிற்சியாளரை அதிரடியாக தூக்கிய ஸ்பெயின்..!

ரஷியாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஸ்பெயினும் கருதப்படுகிறது.

அந்த அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வெள்ளிகிழமை பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூலேன் லோபெட்டேகுய் இருந்து வந்தார்.

இவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடம் பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். சம்மதம் தெரிவித்த அடுத்த நாளே ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பிரான்ஸ் கால்பந்து அசோசியேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் கால்பந்து அசோசியேசன் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் கூறுகையில் ‘‘நாங்கள் பிரான்ஸ் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரை நீக்கும் முடிவுற்கு தள்ளப்பட்டோம். சிறந்த அதிர்ஷ்டம் பெற நாங்கள் அவரை வாழ்த்துகிறோம்.

ஸ்பெயின் கால்பந்து அசோசியேசனுக்கு தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ரியல் மாட்ரிட் அணிக்கு பயிற்சியாளராக சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற பத்திரிகை செய்தி வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.

நான் பிரான்ஸ் வீரர்களிடம் பேசினேன். புதிய பயிற்சியாளர்களுடன் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்’’ என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்