நார்த்தை பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா!!
நம்மில் பலருக்கு உடம்பு அதிக உஷ்ணம் தன்மை உடையதாக இருக்கும்.அவ்வாறு இருப்பவர்கள் அதனை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.அவர்கள் நார்த்தம் பழம் சாறு குடிப்பதன் மூலமும் உடல் சூட்டினை தவிர்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் தினமும் காலையும் ,மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து அதனை நீரில் நனைத்து 1ஸ்புன் தேன் விட்டு சாப்பிட்டு வந்தால் போதும்.
வயிற்றுப்புண் குணமாகும்
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிகமான நபர்களுக்கு வயிற்று புண் உள்ளது.வயிற்று புண் இருப்பவர்கள் அதனை போக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.அவ்வாறு செய்தால் அது பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.எனவே வயிற்று புண் உள்ளவர்கள் நார்த்தங்காயை நன்றாக நறுக்கு அதில் உப்பு சேர்த்து அதனை ஒரு மண் பானையில் வைத்து பானையின் வாயை துணி வைத்து மூடி அவ்வப்போது அதனை வெயிலில் உலர்த்தி வைக்க வேண்டும்.இவ்வாறு 40நாட்கள் கழித்த பின்னர் அதனை தினமும் காலையில் உட்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
பித்தத்தை போக்கும்
உடலில் உள்ள பித்தத்தின் அளவு அதிகரித்தால் நமக்கு தலை சுற்று ஏற்படும்.அதுமட்டுமல்லாமல் ரத்தம்ம் அசுத்தம் அடையும்.எனவே தினமும் காலையில் ஒரு நார்த்தங்காய் சாப்பிட்டால் ரத்தம் அசுத்தமாதல் தடுக்கப்படும்.இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைவதையும் தினமும் நார்த்தம் பழம் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம்.