நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம்…சுமித்ரா மகாஜன் வேண்டுகோள்…!!

Default Image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 11ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பங்கேற்கும் கடைசி முழு நீளக் கூட்டத்தொடர் இதுவாகும். ஆளும் அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது என்பதால், ரபேல் ஒப்பந்தம், விவசாயிகள் பிரச்னை, சி.பி.ஐ விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப வாய்ப்புள்ளது.
எனவே அவையை சுமூகமாக நடத்த கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் 11ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்