நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, மஹாலக்ஷ்மி குடியேற வேண்டுமா?! இதனையெல்லாம் செய்யவே கூடாது!

Default Image
  • வீட்டில் செல்வம்  பெறுக வேண்டும் என நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதை விட என்னவெல்லாம் செய்யக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டும்.
  • வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே நம் வீட்டு மஹாலக்ஷ்மி நம் வீட்டை விட்டு நீங்காமல் இருப்பாள்.

நம் அனைவர்க்கும் நம் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலர்  நாங்கள் நன்றாக உழைக்கின்றோம் சம்பாதிக்கின்றோம் ,ஆனால், எனோ செல்வம் வீட்டில் தங்குவதில்லை என கூறுவர். நாம் நம் வீட்டில் செல்வம் சேர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விட எண்ணெல்ல்லாம் செய்யக்கூடாது என ஒரு பட்டியலே இருக்கிறது. அதனை பின்பற்றினாலே நம் வீட்டில் செல்வம் பெருகும்.

நம் வீட்டினை சுத்தம் செய்யும் போது கிடைக்கும் கிழிந்த துணிகள், உடைந்த பயன்பாடற்ற பொருட்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்கவே கூடாது. அதனை உடனே அகற்றிவிடவேண்டும். அந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு எதிர்மறையான ஆற்றலை கொடுகொண்டே இருக்கும்.

அடுத்து வீடு கூட்டும் துடைப்பம். அது நம் வீட்டில் உள்ள அசுத்தத்தை அகற்றி, வீட்டில் மகாலக்ஷ்மி வரவழைக்க பயன்படுகிறது. அதனை செங்குத்தாக வைக்க கூடாது. காரணம் அப்படி வைத்தால் நம் வீட்டுக்கு வரவேண்டிய செல்வங்களை பூமாதேவி எடுத்துக்கொள்வாள் என நம்பப்படுகிறது. அந்த துடைப்பம் மிகவும் பலதானதை வைக்க கூடாது. துடைப்பத்தை மாற்றிவிட வேண்டும்.

குப்பையை கூட்டி மூலையில் சேகரித்து உடனே அகற்றி விட வேண்டும். வாசல் நேரே குப்பையை குவிக்க கூடாது. வாசல் நேரே குப்பை கூடையை வைக்கவும் கூடாது. வீட்டை சுத்தம் செய்து முடித்ததும், தண்ணீரில், கல் உப்பு, மஞ்சள், கற்பூரம் ஆகியவற்றை கலக்கி வீட்டு மூலையில் தெளித்துவிட வேண்டும். மேற்கண்ட செயல்களை செய்தாலே வீடு சுத்தமாக இருக்கும். மஹாலக்ஷ்மி குடியேறுவாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்