தெப்பத்தில் எழுந்தருளி காட்சிதந்த மதுரை மீனாட்சி.. தெப்பத் திருவிழா கோலாகலம்

Default Image

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா ஜன., 27ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. கோடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கியத்துவமாக கருதப்படும் தெப்பத்திருவிழா சனிக்கிழமை வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவில் பங்கேற்க கோயிலில் இருந்து சுவாமி அம்மன் காலையிலேயே புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் வந்து எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாளுக்கு தீபாரதனை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி அருட்காட்சி தந்தார். இக்காட்சியை காண தெப்பக்குளத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய  காட்சித்தர கூடிய சுவாமி அம்மனை தரிசனம் செய்ய குவிந்து அருளாசி பெற்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்