தென்கொரியாவில் கட்டிடத்தில் தீ விபத்து 29 பேர் உயிரிழந்தனர்.

Default Image
தென்கொரியா; ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ ஆனது  கட்டிடம் முழுவதும் பரவியது இதில்  தீயில் சிக்கியும் மற்றும்  புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மற்றும் அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் இதுவும்  ஒன்றாக கருதப்படுகிறது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்