தூக்கமின்மையால் அவதிபடுகிரீர்களாக!! உடனே தூக்கம் வரவேண்டுமா இதை செய்யுங்கள்…

Default Image

தூக்கமின்மை இன்றைய காலத்தில் பலருக்கு வரும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படும் அவசியமான ஆழ்ந்த உறக்கத்தை தடுக்கிறது.சிலருக்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் குறுகிய கால தூக்கமின்மை வரலாம், ஆனால் சிலருக்கோ பல மாதங்கள் கூட தூக்கமின்மை பாடாய்படுத்துகிறது .Image result for தூக்கம்அக்குபிரஷர் மூலம்உங்களுக்கு எந்த வகை தூக்கமின்மை இருந்தாலும் கவலை வேண்டாம். அக்குபிரஷர் மூலம் தீர்வு காணலாம். அக்குபிரஷர் என்கிற தொடு சிகிச்சை உடலில் உள்ள சில அழுத்தப்புள்ளிகளை தூண்டி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொடு சிகிச்சை செய்ய நிபுணர்கள் உள்ளனர். ஆனால் தூக்கமின்மையை தடுக்கும் 5 முக்கிய அழுத்தப்புள்ளிகளை எவ்வித சிரமமுமின்றி நீங்களாகவே தூண்டலாம்.

முதல் புள்ளிImage result for மணிக்கட்டு மடிப்பு பகுதி

இந்த புள்ளி வெளிப்புற மணிக்கட்டு மடிப்பு பகுதியில் சுண்டு விரலுக்கு கீழே அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருக்கும் சிறிய, வெற்று இடத்தில் மென்மையாக, வட்டமாகவோ மேலும் கீழுமாகவோ அழுத்தம் கொடுக்கவும்.அதன் பின் 2 முதல் 3 நிமிடங்கள் தொடர்ந்து அழுத்தம் தரவும்.மேலும் அந்த புள்ளியின் இடது புறம் சில நிமிடங்களும், வலது புறம் சில நிமிடங்களும் அழுத்தி பிடிக்கவும். இன்னொரு கையிலும் இதை செய்யவும். இந்த புள்ளி மனதை அமைதி படுத்துகிறது.அதன் காரணமாக நன்கு தூக்கம் வரும்.இந்த புள்ளிக்கு ஸ்பிரிட் கேட் என்று பெயர்.

இரண்டாம் புள்ளிImage result for கணுக்கால்

இந்த புள்ளி கணுக்காலுக்கு சற்று மேலே உட்புற காலில் அமைந்துள்ளது. கணுக்காலில் அதிகபட்ச புள்ளியை கண்டுபிடிக்கவும். பின்  கணுக்காலுக்கு மேலே நான்கு விரல் அங்குலங்கள் எண்ணுங்கள். உங்கள் அடி கால் எலும்புக்கு (கால்விரல்) பின்னால் ஆழமான அழுத்தத்தை கொடுங்கள். நான்கு முதல் ஐந்து விநாடிகளுக்கு வட்டமான அல்லது மேல்-கீழ் இயக்கங்கள் மூலம் மசாஜ் செய்யவும். தூக்கமின்மையுடன் கூடுதலாக, இந்த அழுத்தம் புள்ளியை தூண்டுவது இடுப்பு பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்ய உதவுகிறது.இதற்கு த்ரீ இன் இன்டர்செக்ஷன் என்று பெயர்.

மூன்றாம் புள்ளிImage result for கணுக்கால்

மூன்றாம் புள்ளி காலடியில் உள்ளது. இது உள்நோக்கி உங்கள் கால்விரல்களை உள்ளே தள்ளும் போது உங்கள் காலின் நடுவில் ஏற்படும் சிறிய அழுத்தம்.முட்டிகளை மடக்கி முதுகு தரையில் படும்படி படுத்துக்கொள்ளவும். இவ்வாறு செய்யும்போது கால்களை கைகளால் தொட முடியும்.அதன் பின் உங்கள் கையில் ஒரு காலை எடுத்து உங்கள் கால் விரல்களை மென்மையாக சுருட்டுங்கள்.அவ்வாறு சுருட்டும் போது  உங்கள் பாதத்தின் அடியில் ஏற்படும் அழுத்தத்தை உணருங்கள். சுறுசுறுப்பான அல்லது மேல்-கீழாக ஒரு சில நிமிடங்களுக்கு இந்த மசாஜ் செய்யவும். இந்த புள்ளி உங்கள் ஆற்றலை நிலைப்படுத்தி தூக்கத்தை தூண்டுவதாக நம்பப்படுகிறது.இதற்கு பப்லிங் ஸ்ப்ரிங் என்று பெயர்.

நான்காவது புள்ளிImage result for உள்ளங்கை

இது தசை நாண்களுக்கு நடுவில் உள்-முழங்கையில் அமைந்துள்ளது. உள்ளங்கையை பார்த்தபடி கைகளை திருப்பிக் கொண்டு  ஒரு கையை எடுத்து மணிக்கட்டு மடிப்பிலிருந்து மூன்று அங்குலங்கள் எண்ணவும். அந்த  இடத்தில் இரு தசைநார்களுக்கு இடையே கீழ்நோக்கி ஒரு நிலையான அழுத்தம் கொடுக்கவும்.நான்கு அல்லது ஐந்து விநாடிகளுக்கு அப்பகுதியில் வட்ட அல்லது மேல்-கீழாக மசாஜ் செய்யவும். நன்றாக தூங்குவதற்கு உதவுவது மட்டுமின்றி வாந்தி, வயிற்று வலி, தலை வலி போன்றவற்றுக்கும் இன்னர் பிரான்டியர் கேட் புள்ளி நிவாரணம் தரும்.

ஐந்தாவது புள்ளிRelated image

இந்த புள்ளி  உங்கள் கழுத்துக்கு பின்னால் உள்ளது. உங்கள் காதுகளுக்கு பின்னால் உள்ள மஸ்டாய்ட் எலும்பை தொடர்ந்து கழுத்து தசைகள் மண்டையோடு இணைக்கிற இடத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தை ஒட்டி இந்த புள்ளி இருக்கும். தூக்கமின்மை சிகிச்சை.  இரு கைகளையும் ஒன்றாக இணைத்து, விரல்களை பிணைத்து மெதுவாக உள்ளங்கைகளை மட்டும் திறக்கவும். அதன் பின் கட்டை விரலை கொண்டு உங்கள் மண்டை ஓட்டின் மீது வட்டமாகவோ மேலும் கீழுமாகவோ 4 முதல் 5 நொடிகள் மசாஜ் செய்யவும்.  மசாஜ் செய்து கொண்டே ஆழமாக மூச்சு விடவும். இந்த அழுத்தத்தை தூண்டுவது, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவும். இது மன அழுத்தத்தை குறைப்பதோடு, மனதை அமைதிப்படுத்தவும் செய்யும்.இதற்கு விண்ட் பூல் புள்ளி என்று பெயர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்