'துணைவேந்தர் நியமனத்துக்கு சமமந்தம் இல்லை' ஆளுநர் கூறியது வியப்பளிக்கிறது அமைச்சர் பதில்…!!

Default Image

துணைவேந்தர் நியமனத்துக்கு உயர்கல்வித்துறைக்கும் சம்மந்தம் கிடையாது என அமைச்சர் அன்பழகன் பேட்டி..
கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். இன்று சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.Image result for higher education minister of tamilnaduஅப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.
Image result for ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில்  தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும்  நான்  தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் இதுகுறித்து தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்  செய்தியாளர்களிடம் பேசிய போது துணைவேந்தர் நியமனத்துக்கு , உயர்கல்வித்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.தொடர்ந்து அவர் கூறும் போது , தெரிவுக்குழு அமைப்புடன் அரசின் பணி முடிந்து விடுகிறது.உயர்கல்வித்துறைக்கும் , துணைவேந்தர் நியமனத்துக்கு எந்த சம்மந்தமும் கிடையாது.தகுதியில் அடிப்படையே துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார்.ஆளுநர் கூறியது வியப்பளிக்கிறது , எதை மனதில்வைத்து இந்த கருத்தை ஆளுநர் கூறினார் என்று அவரிடம் தன் கேட்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்