தினம் ஒரு திருவெம்பாவை

Published by
kavitha
  • எங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி
  • தினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.

 

திருவெம்பாவை

பாடல் : 13

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாயக் தாடேலோர் எம்பாவாய்!

– மாணிக்கவாசகர்-

பாடல் விளக்கம் :

கரிய குவளை மலர்கள் குளத்தின் நடுவில் உள்ளது.அதன் அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்களாக முளைத்து உள்ளன.நீர் காக்கைகள் எல்லாம் நீரில் மிதக்கினறது.அத்தகைய இந்த குளத்தில் மக்கள் தங்கள் அழுக்கை கழுவ வருகிறார்கள் அதனோடு நமச்சிவாய என்று சப்தமிடுகிறார்கள் இதனால் இந்த குளம் சிவன் மற்றும் பார்வதியை போன்று காட்சி அளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்தில் சங்கு வளையல்கள் சலசலக்க,கால் வளையல்கள் கலகலவென ஒலியெழுப்புகிறது மார்பு விம்ம குளத்தின் நடுபகுதிக்கு சென்று நீராடுவோம் என்று பாடுகிறார்.

மாணிக்கவாசகரின் தெய்வீக பார்வையில் சிவன் -பார்வதி:

கரிய நிறம் கொண்டவள் அம்பிகை அதனால் தான் அம்பாளை சியாமளா என்று அழைக்கிறோம் சியாமளம் என்றால் கருநீலம் என்று பொருள் சிவந்தநிறமுடையவர் சிவன் அம்பிகையை கரிய குவளை மலராகவும் தாமரையை சிவனாகவும் பாவித்து தன் பாடலில் பாடியுள்ளார்.குளம் உள்ளது அது சாதராணக் குளமாக இருந்தால் உடல் அழுக்கு நீங்கும்,அதுவே பக்தி குளமாக இருந்தால் மன அழுக்கு நீங்கும் என்ற அருமையான கருத்தை எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்.

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

21 minutes ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

1 hour ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

2 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

2 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

5 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

6 hours ago