திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாரகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கினார்.
66வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவானது டிச., 23-ம் தேதி அன்று டெல்லி உள்ள விக்யான் பவனில் கோலகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் தான் தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் மகாநடி பெற்றது. மேலும் தமிழில் பாரம் படமும் அதேபோல் இந்தியில் அந்தாதூன் என்ற படமும் சிறந்த படங்களாக தேர்வாகி அதற்கான விருதினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
இந்நிலையில் திரைப்படத்துறையிலேயே உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டுக்கான நடிகராக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் சில காரணங்களால் அந்நிகழ்ச்சியில் அவரால் பங்குகொள்ள முடியாமல் போனது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்ட நடிகர் அமிதாப் என்னால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதுக்கு வருத்தம் தெரிவித்தார்.இந்நிலையில் தான் மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து அறிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் இன்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதே போல் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். இந்த நிகழ்வினை காண நடிகர் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.விருதைப் பெற்ற பின்னர் பேசிய நடிகர் அமிதாப் பச்சன், தாதா சாகேப் பால்கே விருது பெறுவதை மிக பெருமையாக கருதுகிறேன்.மேலும் நான் இந்த இடத்தில் நிற்ப்பதற்கு காரணம் என் ரசிகர்கள் மற்றும் அவர்களின் மிகப்பெரிய ஆதரவு என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…