தாசில்தாரை அடித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கணவர்….வழக்கு பதிந்தது போலீஸ்…!!

Default Image
உத்தர பிரதேசத்தில் தாசில்தாரை அடித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நான்பரா தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாதுரி வர்மா.  இவரது கணவர் திலீப் வர்மா.  கடந்த 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில் பஹ்ரைச் நகரில் உள்ள மஹசி தொகுதியில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலீப்.
இந்த நிலையில், திலீப் மற்றும் இவரது ஆதரவாளர்கள் 25 பேர் தாசில்தார் ஒருவரின் அறைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதில் மதுசூதன் ஆர்யா என்ற தாசில்தாரிடம் திலீப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.  அவரை அடித்து, தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.இந்த சம்பவத்தினை தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் கதவை மூடி, பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திலீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், காவல் நிலையத்தில் சில போலீசாருடனும் கடந்த காலத்தில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தாக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் ஆர்யா புகார் அளித்துள்ளார்.  அடித்ததில் உள்காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.இதன் பேரில் திலீப் வர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்