தவறுதலாக சுட்ட ஆஃப்கன் ராணுவம் ! பொதுமக்கள் 9 பேர் பலி..!

Default Image

ஆஃப்கன் ராணுவம் தவறுதலாக சுட்டதில் அப்பாவி பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

நங்கர்ஹர் ((Nangarhar)) மாகாணத்தில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியதாகவும், அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், மாகாண ஆளுநர் ஹயத்துல்லா ஹயாத் ((Hayatullah Hayat)) தெரிவித்துள்ளார். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாக கூறிய அவர் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது எப்படி என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.Related image

சாப்பர்ஹர் ((Chaparhar)) மாவட்டத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான சோதனையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சணடையில் பொதுமக்களில் 8 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்