தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது….!!

Default Image

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் நாராயணாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்டி ரஃபேல் ஊழல் புகாரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்ப்பதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்